தாய்லாந்து:

சகோன் நகோன் பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில், வகுப்பு தோழருடன் ஏற்பட்ட தகராறுக்குப் பிறகு ஆசிரியர் கண்டித்ததால் 9 வயது மாணவன் ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது.

வீட்டிற்கு அனுப்பப்பட்ட மாணவன் பின்னர் அரிவாளுடன் பள்ளிக்கு திரும்பி ஆசிரியரை நோக்கி ஓடியதால் மாணவர்களிடையே பதற்றம் ஏற்பட்டது.

பின்னர் பள்ளி பாதுகாவலர் தலையிட்டு மாணவனை சமாதானப்படுத்தி அரிவாளை பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.