பெட்டாலிங் ஜெயா, நவ.16-
7 மரண தண்டனைகளை மறு ஆய்வு செய்யும் அரசின் முயற்சியை ஜ.செ.க.வின் அனைத்துலக உறவுகளுக்கான துணைச் செயலாளர், கஸ்தூரி பட்டு வெகுவாகப் பாராட்டினார்.
இருந்த போதிலும் அரசின் இம்முயற்சி இத்துடன் நின்று விடாது என்று நான் எதிர்பார்க்கிறேன்.
தண்டனைக்கான வழிகாட்டியை நிர்ணயித்து அதற்கான மன்றத்தை அமைத்து பிரம்படியையும் அகற்றுவதற்கானத் தருணம் இப்போது வந்து விட்டது என்று தாம் கருதுவதாகப் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது கஸ்தூரி பட்டு குறிப்பிட்டார்.
