அம்பாங்:

இந்து சமயம் சார்ந்த பல்வேறு செயல் திட்டங்களை முன்னெடுத்து வரும் இந்து தர்ம மாமன்றம் தங்களுக்கென ஒரு சொந்தமான அலுவலகத்தை வாங்குவதற்கு பொது மக்களின் உதவியை நாடுகிறது.

தற்போது பிரிக்பீல்ட்ஸ்-இல் இயங்கி வரும் அலுவலகத்திற்கு மேல் 5-ஆவது மாடியில் உள்ள புதிய அலுவலகத்தை வாங்குவதற்கு சுமார் 6 லட்சம் ரிங்கிட் தேவைப்படுவதாக இந்து தர்ம மாமன்றத்தின் தலைவர் ரிஷி குமார் கூறினார்.

இந்தப் புதிய அலுவலகத்தில் 30 பேர் அமர்ந்து சந்திப்பு கூட்டம் நடத்துவதற்கான வசதி இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இந்நிலையில், சொந்த அலுவலகத்தை வாங்க சுமார் 3 மாதங்களே உள்ளதாகவும் பொது மக்கள் தங்களால் இயலும் நிதியுதவியை வழங்கி துணை நிற்குமாறு ரிஷி குமார் கேட்டுக் கொண்டார்.

இந்த புதிய அலுவலகம் மாமன்றத்தின் சமூக சேவை செயல்பாடுகளை விரைவாக முன்னெடுக்க பெரும் உதவியாக இருக்கும் என்றும், ரிஷி குமார் கூறினார்.