ஈப்போ:

2008-ஆம் ஆண்டு பெட்ரோல் விலையைக் குறைப்பதாகக் கூறிய வாக்குறுதியைத் தவறாகச் சித்தரிப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விமர்சித்துள்ளார்.

சவுதி அரேபியாவில் பெட்ரோல் 50 சென்னாக இருந்தபோது அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என்றும் தற்போதுள்ள சூழல் வேறு என்றும் அவர் விளக்கமளித்தார்.

மலேசியாவின் தற்போதைய பெட்ரோல் விலை (ரிம1.99) புருணையைத் தவிர மற்ற அனைத்து நாடுகளையும் விடக் குறைவாகவே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.