கோத்தா பாரு:

கிளந்தான், கோத்தா பாருவில் தனது மைத்துனி குளிப்பதைத் தனது கைபேசியில் ரகசியமாகப் படமெடுத்த 36 வயது தற்காலிக இமாம் ஒருவருக்கு நீதிமன்றம் ரிம 8,000 அபராதம் விதித்தது.

கடந்த நோன்புப் பெருநாளின் நான்காவது நாளில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அந்த நபர் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

நீதிபதி ரெய்ஸ் இம்ரான் ஹமித் இந்தத் தீர்ப்பை வழங்கியதுடன், அபராதத்தைச் செலுத்தத் தவறினால் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் உத்தரவிட்டார்.