கோலாலம்பூர்:

பெட்ரோல் விலை உயர்வு குறித்து பாஸ் தலைவர் தான் ஸ்ரீ ஹாடி அவாங் கற்பனையில் வாழ்வதாகவும், மக்களைத் திசைதிருப்ப முயற்சிப்பதாகவும் பிகேஆர் (PKR) குற்றம் சாட்டியுள்ளது.

ஈரானின் கடல்வழித் தடைகள் மற்றும் உலகளாவிய விநியோகப் பற்றாக்குறையே விலை உயர்வுக்குக் காரணம். ஹாடி அவாங்கின் தர்க்கம் தவறானது என்று கூறிய பிகேஆர்,

அவர் வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்துகிறாரா என்றும் அக்கட்சி மதப் பிரிவுத் தலைவர் அமிடி அப்துல் மனான் கேள்வி எழுப்பியுள்ளார்.