கோலாலம்பூர்:

மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கும் ‘பெஞ்ஞாத்துவான் உம்மா” முன்னெடுப்பு நெகிரி செம்பிலானிலிருந்து மீண்டும் தொடங்குவதாக பாஸ் கட்சி தெரிவித்துள்ளது.

அம்னோவும் பாஸ் கட்சியும் மீண்டும் அரசியல் ஒத்துழைப்பை ஏற்படுத்திக்கொள்வதற்கான ஆருடத்தை, பாஸ் கட்சி தகவல் பிரிவு தலைவர் ஃபாட்லி ஷாரி அவரது சமூக ஊடக பதிவில் முன்வைத்துள்ளார்.

ஆனால், மேலதிக தகவலை அவர் வழங்கவில்லை.