சிரம்பான்:

நெகிரி செம்பிலானில் பெரிக்காத்தான் நேஷ்னலின் (PN) 5 சட்டமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தின் நிலைத்தன்மை மற்றும் மக்களின் நலன் கருதி, தேசிய முன்னணியுடன் (BN) இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர்.

மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹாரூன் மீது BN நம்பிக்கை இழந்தது.

அதனைத் தொடர்ந்து, நிலவும் தலைமைத்துவ நெருக்கடியைத் தீர்க்க எதிர்க்கட்சித் தலைவர் முகமது ஹனிஃபா அபு பக்கர் இந்த முடிவை வெளியிட்டார்.