சுங்கைப்பட்டாணி, ஜன.15-
நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் பாஸ் கட்சி பெற்ற மகத்தான வெற்றிக்கு இனவாத பேச்சுகளும் ஆடம்பர இரவு விருந்து நிகழ்ச்சிகளுமே காரணம் என்று பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் ரஃபிசி ரம்லி ரஃபிசி ரம்லி சாடினார்.
பண அரசியல் மற்றும் “ நாட்டை மலாய்க்காரர்கள் அல்லாதோர் ஆட்சி புரிந்து விடுவார்கள்” என்று அடிக்கடி முழங்கி வந்தனர். இதுவே 15ஆவது பொதுத் தேர்தலில் இந்த இஸ்லாமிய கட்சி மிகப்பெரிய வெற்றி பெறுவதற்குக் காரணமாக அமைந்தது என்பதை ரஃபிசி சுட்டிக் காட்டினார்.
15 ஆவது பொதுத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் 74 தொகுதிகளை வென்றது. இதில் பாஸ் கட்சிக்கு 49 இடங்கள் கிட்டின. இத்தேர்தலில் தனிப்பட்ட கட்சியாக பாஸ் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.
இதனையடுத்து ஜசெக (40),பிகேஆர் (31), அம்னோ (26) மற்றும் பெர்சத்து (25) ஆகிய கட்சிகள் திகழ்ந்தன.