இறுதிக் கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கும் பிக் பாஸ் போட்டியில் இருந்து இந்த வாரம் வெளியேறியது யார்? பிக்பாஸ் புரோமோவை பார்க்கும் போது, ஒரு போட்டியாளர் இவ்வாரம் வீட்டைவிட்டு வெளியேறுகின்றார்.

கொடுக்கப்பட்டிருக்கும் 10 லட்சம் ரிங்கிட்டை எடுத்துக்கொண்டு ஒரு போட்டியாளர் போட்டியில் இருந்து பின்வாங்கி கொள்ளலாம் என்று பிக் பாஸ் கூறுகிறார். ஆனால் யாருமே அதற்கு முன் வராமல் கடைசிவரை போராட முடிவு செய்தனர்.

இதில் அதிக அளவில் வாக்குகளைப் பெற்று வரும் சிநேகன், ஆரவ், கணேஷ் ஆகியோர் காப்பாற்றப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது. இதனிடையே, சமூக வலைத்தளங்களின் யூகங்களும் கணிப்புகளின் படி, பிந்து மாதவி குறைந்த வாக்குகள் மூலம் வெளியேறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மற்றுமொரு நிலவரத்தின்படி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருப்பது ஹரிஸ் என்று உறுதியாக ஒரு தரப்பு கூறுகிறது. அது குறித்த புகைப்படம் ஒன்றும் வெளியாகி உள்ளது. காரணம் அந்த ப்ரோமாவில் பிஸ் பாஸ் வீட்டில் செல்பி எடுக்கும் போது, ஹரிஸின் முகம் சோகமாக காணப்பட்டதுடன், வீட்டின் வாசல்(கேட்) பகுதிக்குச் செல்லும் போது, கணேஷ் அவரை அரவணைப்புடன் தாங்கிப் பிடித்து சென்ற காட்சியில் பிந்துவின் முகம் மகிழ்ச்சியில் இருப்பது தெளிவாகத் தெரிவதால் இம்முறை பிக்பாஸ் வீட்டில் இருந்து விடைபெற்றவர் ஹரிஸ்தான் என்று அடித்துக் கூறப்படுகிறது.