காப்பார், ஜூலை 14-
சிலாங்கூர், காப்பாரில் அமைந்துள்ள காப்பாரூர் அருள்மிகு ஸ்ரீ ஆதிபராசக்தி ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஜூலை 12ஆம் தேதி நடைபெற்ற இந்த ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழாவில் 3000 திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மலாக்கா சிவ ஸ்ரீ சண்முக குருக்கள் தலைமையில் ஆகம முறைப்படி கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

சிறப்பு பூஜை, மகேஸ்வர பூஜைக்குப் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.