கோலாலம்பூர் ஜூலை 29 

 நாட்டில் இணைய பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் டிஜிட்டல் நேஷனல் பெர்ஹாட்-சைபர்செகுயூரிட்டி மலேசியா இடையே  புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று  கையெழுத்தானது.

  இலக்கவியல் அமைச்சர்  கோவிந்த் சிங் டியோ  தலைமையில்  இவ்விரு நிறுவனங்களுக்கிடையே  ஒப்பந்தம் இன்று  கையெழுதிடப்பட்டது .

 இலக்கவியல் அமைச்சின் கீழ் செயல்படும் டிஜிட்டல் நேஷனல் பெர்ஹாட்  மற்றும் சைபர் செகுயூரிட்டி மலேசியா   நிறுவனங்களுக்கு  இடையிலான இந்த  புரிந்துணர்வு உடன்படிக்கை  5ஜி உட்பட  இணைய  மிரட்டல்களுக்கு எதிராக  இலக்கவியல்  கட்டமைப்பை  பாதுகாக்க  உதவும்  என்று அமைச்சர்  தெரிவித்தார் .

“ இனிய பாதுகாப்பு  என்பது அனைவரின் கடப்பாடாகும் . கூட்டு  பங்காளித்துவத்தை  வலுப்படுத்திக் கொள்வதன் வழி   இணைய  மிரட்டலை  அடையாளம் கண்டு  தடுக்கலாம்”  என்று  இந்த நிகழ்ச்சியில்   சிறப்புரை  ஆற்றுகையில் குறிப்பிட்டார் .

5ஜி அலைவரிசை  நாட்டின் மிகப்பெரிய  தகவல் கட்டமைப்பு துறைகளை உள்ளடக்கியுள்ளது . குறிப்பாக,  தகவல்  சொத்துடைமை , செயல்முறைகள் ,  அடிப்படை வசதிகள்  மற்றும் சேவைகள்   போன்றவை  இதில் அடங்கும்.

  இவை  நாட்டின்  தற்காப்பு , பொருளாதார நிலைத் தன்மை , அரசாங்க செயல்பாடுகள்  மற்றும் சமூக நடவடிக்கைகள்  ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன    என்றார் கோவிந்த்  சிங்.