கோலாலம்பூர் ஜூலை 29
நாட்டில் இணைய பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் டிஜிட்டல் நேஷனல் பெர்ஹாட்-சைபர்செகுயூரிட்டி மலேசியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.
இலக்கவியல் அமைச்சர் கோவிந்த் சிங் டியோ தலைமையில் இவ்விரு நிறுவனங்களுக்கிடையே ஒப்பந்தம் இன்று கையெழுதிடப்பட்டது .
இலக்கவியல் அமைச்சின் கீழ் செயல்படும் டிஜிட்டல் நேஷனல் பெர்ஹாட் மற்றும் சைபர் செகுயூரிட்டி மலேசியா நிறுவனங்களுக்கு இடையிலான இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை 5ஜி உட்பட இணைய மிரட்டல்களுக்கு எதிராக இலக்கவியல் கட்டமைப்பை பாதுகாக்க உதவும் என்று அமைச்சர் தெரிவித்தார் .
“ இனிய பாதுகாப்பு என்பது அனைவரின் கடப்பாடாகும் . கூட்டு பங்காளித்துவத்தை வலுப்படுத்திக் கொள்வதன் வழி இணைய மிரட்டலை அடையாளம் கண்டு தடுக்கலாம்” என்று இந்த நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றுகையில் குறிப்பிட்டார் .
5ஜி அலைவரிசை நாட்டின் மிகப்பெரிய தகவல் கட்டமைப்பு துறைகளை உள்ளடக்கியுள்ளது . குறிப்பாக, தகவல் சொத்துடைமை , செயல்முறைகள் , அடிப்படை வசதிகள் மற்றும் சேவைகள் போன்றவை இதில் அடங்கும்.
இவை நாட்டின் தற்காப்பு , பொருளாதார நிலைத் தன்மை , அரசாங்க செயல்பாடுகள் மற்றும் சமூக நடவடிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன என்றார் கோவிந்த் சிங்.