மலேசியா புத்ரா ஜெயா, ஏப். 22-மலேசியா-சீனா இடையிலான விசா விலக்கு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

அவ்வகையில் சீனச் சுற்றுப் பயணிகள் 90 நாட்களுக்கு விசா இன்றி நாட்டில் தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்றார் அவர்.

அதே போன்று  சீனா செல்லும் மலேசியர்களும் 90 நாட்களுக்கு விசா இல்லாமல் அந்நாட்டில் தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் சொன்னார்.

கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி மலேசியாவும் சீனாவும் 31 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

இதில் இரு நாடுகளின் பயணிகளுக்குப் பரஸ்பர விசா விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவ்வாண்டில் இதுவரை சுமார் ஒரு மில்லியன் சீன சுற்றுப் பயணிகள் நாட்டிற்கு வருகை புரிந்திருப்பதாக சைஃபுடின் குறிப்பிட்டார்.