கோலாலம்பூர் மார்ச் 10-

லண்டனில் நனடபெற்றுவரும் அகில இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் மலேசியாவின் ஏரோன் சியா – சோ யிய் யோக் ஜோடி இறுதியாட்டத்திற்கு தகுதி   பெற்றனர்.

அவர்கள் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்தோனேசியாவின் முகமட் ரியான்- அலிபான் பாஜார் ஜோடியை 12-21, 22-20, 21-19  என்ற புள்ளிக் கணக்கில் வென்றனர். ஏரோன் சியா – சோ யிய் யோக் இன்றைய இறுதியாட்டத்தில் இந்தோனேசியாவின்  முகமட் ஹசன்-ஹென்டராவான்  ஜோடியை சந்திப்பார்கள்