ஈப்போ மார்ச் 25-

நாட்டின் 212 ஆவது போலீஸ் தினத்தை முன்னிட்டு பேரா மாநிலத்திலும் போலீஸ் தின விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டது. மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாநில போலீஸ் தலைவரின் பிரதிநிதியாக குற்றத்தடுப்பு மற்றும் சமுக பாதுகாப்பு பிரின் போலீஸ் துணை ஆணையர் முகமட் லஹாம் கலந்துக்கொண்டார்.

இந்த நிகழ்வில் அவர் , தேசிய போலீஸ் தலைவரின் உரையை வாசித்தார் . பின்னர், போலீஸ் படைப் பிரிவின் சிறந்த சேவையை வழங்கிய போலீஸ் அதிகாரிகளுக்களுக்கும் , அரசு சாரா இயக்கங்களைச் சேரந்தவர்களுக்கும் சிறந்த சேவைக்கான நற்சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த நாற்சான்றிதழ் பெற்றவர்களில் ஈப்போ இந்திய முஸ்லிம் பள்ளிவாசலின் நிர்வாக உறுப்பினரும் பொது நலச்சேவையாளருமான ரிக்மத்துல்லா மற்றும் மாநில போலீஸ் குற்றத்தடுப்பு சமுக அமைப்பின் தலைவரான ஜி. சந்திரசேகர் ஆகியோரும் சான்றிதழ் பெற்றவர்களில் அடங்குவர்.

இந்த நிகழ்வில் மாநில சி்ஐடி தலைவர் யஹாயா அப்துல் ரஹாமான் , மாநில போதைப் பொருள் ஒழிப்பைச் சேர்ந்த தலைவர் வி் ஆர். ரவீச்சந்திரன் உட்பட பல உயர் நிலை போலீஸ் அதிகாரிகள் பலரும் கலந்துக்கொண்டனர் .