கோலாலம்பூர், ஜூலை 1-
மஇகாவில் இளம் தலைமுறையினரின் பிரதிநிதியாக பிரச்சனைகளுக்குப் புத்தாக்க முறையில் தீர்வு காண ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக வரும் கட்சி தேர்தலில் மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் ஆண்ட்ரூ டேவிட் தெரிவித்தார்.
அதே வேளையில், மத்திய செயலவையில் இளைஞர்களின் குரல் ஓங்கவும் துணைபுரியவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இளைஞர்கள் அனைவரும் சிறந்த எதிர்காலத்தைப் பெறுவதற்கு தனக்கு ஆதரவு வழங்கும்படி கட்சி பொறுப்பாளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
“அனைவரும் ஒன்றிணைந்து மாற்றத்தைக் கொண்டு வருவோம்” என்றார் ஆண்ட்ரூ டேவிட்.