தாப்பா, ஏப். 22-ஆயர் கூனிங் இடைத்தேர்தலையொட்டி முன்கூட்டியே வாக்களிப்பு நிறைவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

வாக்களிப்பு மையங்கள் மூடப்பட்ட நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இந்த அறிவிப்பினை வெளியிட்டனர்.

காவல்துறை அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் இன்று தங்களின் வாக்களிக்கும் கடமையை நிறைவேற்றினர்.

முன்கூட்டியே வாக்களிப்பு இன்று நடைபெற்ற நிலையில் 92.8 விழுக்காடு வாக்குகள் பதிவானது .

சுமார் 5000 பேர் முன்கூட்டியே வாக்களிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

வரும் ஏப்ரல் 26-ஆம் தேதி ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது .

மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இந்த இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது.