ஜாசின், ஏப். 22-மலாக்கா, ஜாசின் தாமான் மாஜூ அருள்மிகு கருமாரியம்மன் திருக்கோயிலில் டாக்டர் சந்திரன் மற்றும் அவரின் குழுவினர் தலைமையிலான மலேசிய இந்து சங்கம் ஜாசின் வட்டார பேரவை ஏற்பாட்டில் சித்திரைப் புத்தாண்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் பரத நாட்டியம், வீணை மீட்டல் மற்றும் சமய குறவர்களின் மாறுவேடமும் நடைபெற்றது.

நிருத்தசமுத்திர ஆர்ட்ஸ் குரு ஸ்ரீமதி சந்தியா சதீஷ்  நடனப் பள்ளியைச் சேர்ந்த தீபா ஸ்ரீ நாயர்,திஷா வாசுதேவன்,வீணா தான் மற்றும் அனு கீர்த்தனா விஜயன் ஆகியோர் பரத நாட்டியம் வழங்கினர்.

ராக மாலிகா கலாகேந்திரா இசை மற்றும் நடனப்பள்ளி குரு ஸ்ரீ எம். விஜய்கிருஷ்ணனின் மாணவி சிவாஷினி அன்பழகன் பொம்ம பொம்மதா, விளையாட இது நேரமா மற்றும் பாக்கியம் தரும் லட்சுமி போன்ற பாடல்களுக்கு வீணையை மீட்டினார்.

பெற்றோர்களின் பங்கேற்பு இந்நிகழ்வுக்கு மேலும் சிறப்பு சேர்த்தது.

சிறார்கள் தங்கள் கலைத் திறனை வெளிப்படுத்துவதற்கு இந்த சித்திரை விழா நல்லதொரு அடித்தளத்தை ஏற்படுத்தித் தந்தது என்றால் மிகையாகாது.

இவ்விழா சிறப்பாக நடைபெற ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்  திருமதி பிரேமா தேவி பாலன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.