ஷா அலாம்:
சிலாங்கூர் பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் முகமட் சுக்ரி உமார், மாநிலத்தில் பெரிக்காத்தான் நேஷ்னல் (PN) தலைவராக வழிநடத்த டத்தோ டாக்டர் ஹலிம் தமுரி, டத்தோ டாக்டர் அகமது யூனுஸ் ஹைரி மற்றும் டத்தோ இஸ்கண்டார் அப்துல் சமாட் ஆகிய மூன்று தலைவர்களை பரிந்துரைத்துள்ளார்.
அவர்களின் நீண்ட அனுபவம், நிர்வாகத் திறன் மற்றும் நேர்மை ஆகியவை சிலாங்கூர் மாநிலத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த மூவரும் கட்சியின் கொள்கைகளை வலுப்படுத்தி, சிறந்த நிர்வாகத்தை வழங்கக்கூடிய திறன் படைத்தவர்கள் என சுக்ரி உமர் வலியுறுத்தியுள்ளார்.

