கோலாலம்பூர்:
10ஏ எடுத்தும் மெட்ரிகுலேஷன் கிடைக்காத 11 மாணவர்களுக்கு உடனடியாக இடம் வழங்க வேண்டும்.
அமைச்சரவை வாக்குறுதிப்படி இந்த மாணவர்களுக்கு ‘நேரிடை’ முறையில் இடம் கிடைத்திருக்க வேண்டும்.
ஆனால், தகுதியுள்ள மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள மசீச தலைவர் டத்தோ ஸ்ரீ வீ கா சியோங், இத்தவறை அரசு உடனடியாக சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

