கோலாலம்பூர், ஏப். 6-

மலேசியாவில் இன்று 131 கோவிட் 19 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் மரண எண்ணிக்கை 61ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிசாம் அப்துல்லா கூறினார்.

இந்த காரணமாக இதுவரையில் இந்த நோய் தொற்றுக் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,793 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 2,490 பேர் இன்னமும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதனிடையே அவசர சிகிச்சை பிரிவில் 102 பேர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 54 பேர் செயற்கை சுவாச கருவியின் உதவியை நாடியுள்ளார்கள்.

இன்று புதிதாக 1 மரணச் சம்பவம் பதிவாகியுள்ளது.

இதனால் இந்நோய் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 62ஆக உயர்ந்துள்ளது.

இன்று 236 பேர் குணமடைந்துள்ளார்கள். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,241ஆக அதிகரித்துள்ளது.