புத்ராஜெயா:
அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் (IPTA/IPTS) பயிலும் மொத்தம் 4,165 இந்திய மாணவர்கள், நிர்ணயிக்கப்பட்ட தகுதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ததைத் தொடர்ந்து, IPT 5.0 திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறத் தகுதியுடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்போது அதிகாரப்பூர்வமாக மனிதவள அமைச்சின் (கெசுமா) கீழ் இயங்கி வரும் மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவு (மித்ரா). அங்கீகரிக்கப்பட்ட மாணவர்களுக்கான நிதி விநியோகத்தை கடந்த 9 ஏப்ரல் 2026 முதல் கட்டம் கட்டமாகத் தொடங்கியுள்ளது. உதவித் தொகை பெறும் மாணவர்களின் முழுப் பட்டியல் நாளை, 14 ஏப்ரல் 2026 முதல் மித்ராவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களில் பதிவேற்றப்படும்.
மனிதவள அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு இணங்க, மித்ரா தற்போது அதன் புதிய தலைமை இயக்குநர் திரு. ரவீந்திரன் நாயர் அவர்களின் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இவர் கடந்த 24 மார்ச் 2026 அன்று பணியில் இணைந்தார். இதற்கேற்ப, மித்ராவின் திட்டங்கள் அனைத்தும் மீண்டும் சீரமைக்கப்பட்டு, முறையான நிர்வாக விதிமுறைகளைப் பின்பற்றி இன்னும் நேர்த்தியான முறையில் செயல்படுத்தப்படும்.
இந்த IPT 5.0 உதவித் தொகை பெறுவதற்கான தகுதி நிபந்தனைகள்:
1. பி40 (B40) குடும்பத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள்.
பட்டயப் படிப்பு (Diploma) மற்றும் இளங்கலைப் பட்டப்படிப்பு (Degree) பயில்பவர்கள்.
III. 2025/2026 கல்வித் தவணையின் முதலாம் ஆண்டு மாணவர்கள் மட்டுமே.
IV. முழுமையான விண்ணப்ப ஆவணங்களைச் சமர்ப்பித்தவர்கள்.
IPT 5.0 திட்டம் என்பது மலேசிய இந்திய சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறுவதை உறுதி செய்யும் ஒரு தொடர் முயற்சியாகும். குறிப்பாக, உயர்கல்வி நிறுவனங்களில் நுழையும் ஆரம்பக் கட்டத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் நிதிச் சுமையைக் குறைப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
2025-ஆம் ஆண்டிற்கான ‘மித்ரா உயர்கல்வி நிறுவன ஆரம்பக் கால சேர்க்கை உதவித் திட்டம்’ (IPT 5.0 MITRA) குறித்த ஏதேனும் கேள்விகள் இருந்தால், பொதுமக்கள் வேலை நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 03-88866192 என்ற எண்ணில் மித்ரா அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது spl@mitra.gov.my என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
ஆற்றல்மிக்க மற்றும் உயர்திறன் கொண்ட மனித மூலதனத்தை உருவாக்கும் நாட்டின் இலக்கிற்கு ஏற்ப, இந்திய சமூகத்திற்கு சமமான கல்வி வாய்ப்புகளை உறுதி செய்வதில் மித்ரா உறுதியாக உள்ளது.

