சிரம்பான்:
நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருன் மீதான ஆதரவை 14 தேசிய முன்னணி (BN) சட்டமன்ற உறுப்பினர்களும் மீட்டுக் கொண்டது இறுதியானது.
நிர்வாகக் கோளாறுகள் மற்றும் மாநிலத்தின் கலாச்சார, அரச நிறுவனங்களின் உணர்வுகளைப் பாதிக்கக்கூடிய செயல்களால் அவர் மீது நம்பிக்கை இழந்ததே இந்த முடிவுக்குக் காரணம் என மாநில அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ ஜலாலுதீன் அலியாஸ் தெரிவித்துள்ளார்.
நிர்வாகக் கோளாறுகள் மற்றும் மாநிலத்தின் கலாச்சார, அரச நிறுவனங்களின் உணர்வுகளைப் பாதிக்கக்கூடிய செயல்களால் அவர் மீது நம்பிக்கை இழந்ததே இந்த முடிவுக்குக் காரணம்.
இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் அதிகாரப் போட்டிக்காக எடுக்கப்பட்டதல்ல, மாறாக முறையான ஆட்சி நிர்வாகத்தை உறுதிப்படுத்துவதற்காகவே மேற்கொள்ளப்பட்டது என அவர் வலியுறுத்தினார்.

