இந்திய சிகை அலங்கார சங்கத் தேர்தல்: ராஜசேகரன் தலைவராக போட்டியின்றி தேர்வு!

71

கோலாலம்பூர் ஏப்.19-

இன்று நடைபெற்ற மலேசிய இந்திய சிகை அலங்கார சங்கத்தின் தேர்தலில் ராஜசேகரன் போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தலைநகர் சீன அசெம்ளி மண்டபத்தில் நடைபெற்ற சங்கத்தின் 23ஆம் ஆண்டு கூட்டத்துடன் தேர்தலும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மனித வள அமைச்சர் வி.சிவகுமார் மற்றும் ம.இ.கா. உதவி தலைவர் டத்தோ டி.மோகன் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜசேகரனுக்கு சிவகுமாரும் டி.மோகனும் தங்களின் பாராட்டு மற்றும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.