கோலாலம்பூர்:

சபா–கலிமந்தான் எல்லைப் பகுதியில் நீண்ட காலமாக நிலவி வரும் நிலச் சிக்கலைத் தீர்க்க, மலேசியா மற்றும் இந்தோனேசியா (ஜகார்த்தா) இடையே இன்னும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில், புத்ராஜெயா எந்த நிலத்தையும் இந்தோனேசியாவுக்கு ஒப்படைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார்.

மலேசியா 5,207 ஹெக்டேர் நிலப்பரப்பை இந்தோனேசியாவுக்கு ஒப்படைத்ததாக கூறுவது உண்மையல்ல என்றும், எல்லைகள் 1891 மற்றும் 1915 ஆண்டுகளுக்குச் சொந்தமான வரலாற்று உடன்படிக்கைகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டவை என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

எல்லைகளை மறுவரையறை செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் 1977ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, கட்டம் கட்டமாகத் தீர்வு காணப்பட்டதுஎன்று தம்புன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.