கோலாலம்பூர்:

சட்டவிரோத மதக் கட்டடங்கள் அகற்றப்படும்போது சட்டத்தை மதிப்பதோடு, மக்களின் உணர்வுகளையும் மதிக்க வேண்டும் என கூட்டரசு பிரதேச பாஸ் ஆதரவுப் பேரவை (DHPP) தலைவர் Ts டாக்டர் சுபாஷ் சந்திரபோஸ் தெரிவித்துள்ளார்.

இத்தகைய நடவடிக்கைகளை வீடியோவாகப் பகிர்ந்து தேவையற்ற பதற்றத்தை உருவாக்குவதைத் தவிர்க்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பன்முகத்தன்மை கொண்ட மலேசியாவில் சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவது அனைவரது கடமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.