கோலாலம்பூர்:

இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்கவுள்ள உலகக் கிண்ணப் போட்டியின் ஒளிபரப்பு உரிமை மலேசியாவில் இதுவரை விற்கப்படாததால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

FIFA நிர்ணயித்துள்ள சுமார் RM200 மில்லியன் விலை காரணமாக உள்ளூர் ஒளிபரப்பாளர்கள் வாங்க முன்வராதது முக்கிய தடையாக உள்ளது.

ஆனால், பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதுடன், அரசு தொலைக்காட்சி மூலம் சில போட்டிகள் ஒளிபரப்பப்பட வாய்ப்பு உள்ளது.