கோலாலம்பூர் & சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தேர்தல்: தலைவர் பதவிக்கு நிவாஸ் ராகவன் -வி.கே.கே. ராஜசேகரன் போட்டி

67

கோலாலம்பூர் ஏப்ரல் 18-

நாட்டில் பிரசித்தி பெற்ற கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவர் பதவிக்கு நடப்பு தலைவர் நிவாஸ் ராகவனை எதிர்த்து நடப்பு துணைத் தலைவர் வி.கே.கே. ராஜசேகரன் போட்டியிடுகிறார்.

நிவாஸ் ராகவன் அணியில் துணைத் தலைவர் பதவிக்கு குமரகுருவும் ராஜசேகரன் அணியில் பிரபாகரனும் போட்டியிடுகின்றனர்.

உதவித் தலைவர் பதவிக்கு நிவாஸ் அணி சார்பில் டத்தோ சந்திரசேகரனும் ராஜசேகரன் அணி சார்பில் பன்னீர் செல்வமும் களம் இறங்கியுள்ளனர்.

அதே வேளையில், பொருளாளர் பதவிக்கு நிவாஸ் ராகவன் அணி சார்பில் நடப்பு பொருளாளர் டத்தின் மகேஸ்வரியும் ராஜசேகரன் அணி சார்பில் செல்வராஜுவும் போட்டியிடுகின்றனர்.

சங்கத்தின் 14 செயற்குழு பதவிகளுக்கும் இரு அணிகள் சார்பில் கடும் போட்டி நிலவுகிறது.

நிவாஸ் ராகவன் அணி சார்பில் ராம்குமார், குணராஜ்,சண்முக செல்வி,மோகனா சின்னத்தம்பி, முகமட் ராபி, எம்.பி.இராமன், பிரபாகரன் கோவிந்தன், செல்வராசு ஹரிகிருஷ்ணன், கவிவாணன் சுப்பிரமணியம், குமரன் (கவிமாறன்), நாகராஜன், அமுதா முனியாண்டி, ராம்குமார், பெருமாள் இராமன், குளோரி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ராஜசேகரன் அணி சார்பில் டாக்டர் நவமணி, டாக்டர் சித்ரா, பாவ்சியா பிபி, டத்தோ டாக்டர் சுகுமாறன், டாக்டர் ராஜசேகரன் மோகன், டத்தோ சி.எம். விக்னேஸ்வரன் , டாக்டர் மரியா ரூபினா, பிரவின் தமிழ்செல்வம், குட்டி கிருஷ்ணன் ராயர், டோனி கிளிபெர்ட், மீனாட்சி கல்யாண சுந்தரம், போட்டியிடுகிறார்கள்.

இதில் ஜமுனா சுயேட்சையாகப் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது.

வரும் ஏப்ரல் 28ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா சிவிக் செண்டரில் ஆண்டு பொதுக் கூட்டத்துடன் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் குழுவின் தலைவர் ராஜசுந்தரம் குறிப்பிட்டார்.