புத்ராஜெயா, பிப் 9 —

பத்துமலை (Batu Caves) தொடர்பில் எந்தச் சட்ட சிக்கலும் இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுபடுத்தினார்.

ஒற்றுமை அமைச்சின் மாதாந்திர சந்திப்புக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், பத்துமலை சட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வருவதாகவும், அங்கு பிரச்சினை எதுவும் இல்லை என்றும் கூறினார்.

மேலும், மின்படிகட்டு (electric substation) கட்டுவதற்கான அனுமதி குறித்து சிலாங்கூர் மந்திரி பெசாருடன் விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தேவையான நடைமுறைகள் பூர்த்தி செய்யப்பட்ட பின், கூடிய விரைவில் அனுமதி வழங்கப்படும் என நம்பிக்கை வெளியிட்டார்.

இவ்விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் அமைதியாகவும் சட்ட வரம்பிற்குள் செயல்படவும் வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.